ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,147 பேருக்கு கொரோனா தொற்று- 49 பேர் பலி


ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,147 பேருக்கு கொரோனா தொற்று- 49 பேர் பலி
x
தினத்தந்தி 24 July 2020 8:08 PM IST (Updated: 24 July 2020 8:08 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆந்திராவில் 8,147-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 49-பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  

ஆந்திராவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 80,858-ஆக உயர்ந்துள்ளது. 39,935 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆந்திராவில் கொரோனா தொற்றால்  இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  933 ஆக உள்ளது.

ஆனந்தபூர், கிழக்கு கோதாவரி மற்றும் குண்டூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும்  கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.


Next Story