கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,223- பேருக்கு கொரோனா

கேரளாவில் கொரோனா பாதிப்பு விகிதம் 15.75 சதவிகிதமாக உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,223-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 25- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 798- ஆக உள்ளது.
கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 63,019- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 15.75- சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 77,598- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்தில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 2,944- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் 1,562- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story