கேரளாவில் மேலும் 719- பேருக்கு கொரோனா - 5 பேர் பலி

கேரளாவில் மேலும் 719- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 719- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 5 பேர் பலியாகினர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6,148- ஆக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 719- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 3.55 சதவிகிதமாக உள்ளது. தொற்றைக் கண்டறிய 20,250- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் திருவனந்தபுரத்தில் 135- பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோட்டயம் மாவட்டத்தில் 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story