டெல்லியில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 2,146 பேருக்கு தொற்று ..!!

கோப்புப்படம்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தேசிய தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,036 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,146 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,75,540 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,439 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,40,984 ஆக அதிகரித்துள்ளது. தற்போது டெல்லியில் 8,205 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா பாதிப்பால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,351 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.