சட்டவிரோத மதுபானம் விற்பனை: சென்னையில் 41 பேர் கைது


சட்டவிரோத மதுபானம் விற்பனை: சென்னையில் 41 பேர் கைது
x
Gokul Raj B 12 Jun 2022 6:14 AM GMT

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னையில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை மதுபானக் கூடங்கள் மற்றும் இதர இடங்களில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் சென்னை முழுவதும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனையில் மதுபானகூடங்கள் மற்றும் இதர இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 581 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.11,490 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story