பூச்சி மருந்து குடித்து 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

விளையாடியதை தாய் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்து 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கர்ண மகாராஜன். இவருடைய மகன் அருள்முருகன் (வயது 15). இவர் தனது பாட்டி வீடான வெற்றியூர் கிராமத்தில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இவரின் தாயார் அருள்முருகனை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவர் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அருள்முருகன் பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்முருகன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.