கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் மகன் முனியசாமி (வயது 22). இவரும், 19 வயதுடைய வாலிபர் ஒருவரும் பாரதிநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கஞ்சா விற்று கொண்டிருந்துள்ளனர். தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். கஞ்சா விற்றுக் கொண்டிருந்த 2 பேரையும் போலீசார் பிடித்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். கைதான முனியசாமி மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், 19 வயது வாலிபர் மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story