மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை,
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் அந்தோணி ராஜ் என்பவர் விசைப்படகில், கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து கடலுக்கு சென்று மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, 30.11.2017 அன்று பெய்த பெருமழை மற்றும் ஒகி புயலால் ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது ஒகி புயல் காரணமாக உயிரிழந்த அந்தோணி ராஜ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத்துயர சம்பவத்தில் உயிரிழந்த அந்தோணி ராஜ் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story