மீனவர்கள் 20 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு

x
தினத்தந்தி 2 Jun 2019 5:58 PM IST (Updated: 2 Jun 2019 5:58 PM IST)


கன்னியாகுமரி மீனவர்கள் 20 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
கன்னியாகுமரி மீனவர்கள் 20 பேர் மீன்பிடிக்க கடந்த 18 ந்தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்றுள்ளனர். லட்சத்தீவு அருகே தித்திரா தீவுப் பகுதியில் சென்றபோது 2 படகுகள் திடீரென பழுதடைந்துள்ளது.
படகு நடுக்கடலில் பழுதானதால் உணவு, குடிநீரின்றி தத்தளித்து வருகின்றனர். இவர்கள் குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 20 மீனவர்கள் ஆழ்கடலில் சிக்கி தத்தளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire