பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது


பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 5 July 2019 10:52 PM GMT (Updated: 5 July 2019 10:52 PM GMT)

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார்.

சென்னை, 

பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்பட்டு வரும் சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்படும் என்றும், இவ்வாறு பெறப்படும் தொகை சாலை மேம்பாடு மற்றும் கட்டமைப்புக்காக பயன்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய் 19 காசுக்கு விற்பனையானது. ஒரு லிட்டர் டீசல் 67 ரூபாய் 96 காசுக்கு விற்பனையானது. பட்ஜெட் அறிவிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Next Story