விழுப்புரம் அருகே கோர விபத்து: பட்டாசு ஏற்றிய வாகனம் வெடித்து 3 பேர் உடல் சிதறி பலி - 16 பேர் படுகாயம்

விழுப்புரம் அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற வாகனம் வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம்,
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள வீராசாமி(வயது 43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இருந்து திருவண்ணாமலையை சேர்ந்த பரசுராமன் என்பவரது பட்டாசு கடைக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை ஒரு சரக்கு வாகனத்தில் நேற்று ஏற்றிச்சென்றனர்.
அந்த சரக்கு வாகனத்தை கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன்(29) என்பவர் ஓட்டினார். அவருடன் புதுச்சேரி சிவகாமிநகரை சேர்ந்த சாய்பாபா(49) என்பவரும் இருந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள வடவானூரில் நேற்று காலை 7.30 மணி அளவில் வாகனம் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென புகை வந்ததால் டிரைவர் இளவரசன் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி அங்கிருந்த டீக்கடைக்காரர் சாதிக்பாட்ஷாவிடம் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார்.
அவரும் தண்ணீரை கொடுத்துள்ளார். அதனை டிரைவர் வாங்கிச்சென்று வாகனத்தில் தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்த பார்சல்கள் மீது ஊற்றி உள்ளார். அங்கே ஏன் தண்ணீர் ஊற்றுகிறீர்கள் என்று டிரைவரிடம் தையல்கடைக்காரர் ராஜாராம் கேட்டதற்கு, தார்ப்பாய்க்குள் பட்டாசு பார்சல்கள் உள்ளது என்று இளவரசன் கூறி உள்ளார்.
அந்த பார்சல்களில் இருந்து புகைவந்ததால் தண்ணீர் ஊற்றி அணைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் டிரைவரும், சாய்பாபாவும் தண்ணீரை வாங்கி ஊற்றி உள்ளனர். அவர்களுக்கு டீக்கடைக்காரர் சாதிக்பாட்ஷாவும் உதவியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தன. அதனால் அருகில் இருந்த கடைக்காரர்களும், பொதுமக்களும் சிதறி ஓடியிருக்கின்றனர். கணநேரத்தில் வாகனத்தில் இருந்த 6 மூட்டை பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் சரக்கு வாகனமும் வெடித்து சிதறி அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தது.
இந்த கோர சம்பவத்தில் சரக்கு வாகனத்தின் டிரைவர் இளவரசன், சாய்பாபா, டீக்கடைக்காரர் சாதிக்பாட்ஷா ஆகியோர் உடல் சிதறி பலியானார்கள். அவர்களின் தலையும், உடல்பாகங்களும் தனித்தனியாக சிதறி கிடந்தன.
மேலும் இந்த கோர விபத்தில் பட்டாசுகள் சிதறி ஆங்காங்கே விழுந்து வெடித்ததில் 16 பேர் காயம் அடைந்தனர்.
இந்த கோர சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர். மேலும் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர சுப்பிரமணியம், ராஜேஷ்குமார் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தில் இருந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையே இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலையில் உள்ள பரசுராமன் என்பவரது பட்டாசு கடைக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லும்போது வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 16 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி முருங்கம்பாக்கத்தை சேர்ந்த பட்டாசு குடோன் உரிமையாளர் வீராசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். இச்சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தில் பலியான சாய்பாபா, பட்டாசு தொழிற்சாலை ஊழியர் ஆவார். அவருடைய மனைவி வேதவல்லி (45). இவர்களுக்கு சத்யா (21), பிரதீபா (18) என்ற மகள்களும், ஆனந்த் (19) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் சத்யாவுக்கு வருகிற தை மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
கடந்த சில தினங்களாக சாய்பாபாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இவர் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் வீராசாமியின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் முருங்கப்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. பட்டாசு கொண்டு செல்லும்போது உரிமையாளர் வீராசாமி தான் உடன் செல்வது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் அவரால் செல்ல முடியாததால், தனக்கு பதிலாக பட்டாசு வேனில் சென்று வருமாறு சாய்பாபாவிடம் வீடு தேடிச் சென்று பட்டாசு உரிமையாளர் வீராசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு சாய்பாபா தனது உடல்நிலையை காரணம் காட்டி பட்டாசு வேனில் சென்று வர முதலில் மறுத்து விட்டதாக தெரிகிறது. உரிமையாளர் வீராசாமி தொடர்ந்து வலியுறுத்தவே வேறுவழியின்றி அந்த வேனில் சென்றுள்ளார். அப்போது தான் வேன் வெடித்த விபத்தில் சிக்கி உடல் சிதறி சாய்பாபா இறந்துள்ளார்.
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள வீராசாமி(வயது 43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இருந்து திருவண்ணாமலையை சேர்ந்த பரசுராமன் என்பவரது பட்டாசு கடைக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை ஒரு சரக்கு வாகனத்தில் நேற்று ஏற்றிச்சென்றனர்.
அந்த சரக்கு வாகனத்தை கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன்(29) என்பவர் ஓட்டினார். அவருடன் புதுச்சேரி சிவகாமிநகரை சேர்ந்த சாய்பாபா(49) என்பவரும் இருந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள வடவானூரில் நேற்று காலை 7.30 மணி அளவில் வாகனம் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென புகை வந்ததால் டிரைவர் இளவரசன் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி அங்கிருந்த டீக்கடைக்காரர் சாதிக்பாட்ஷாவிடம் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார்.
அவரும் தண்ணீரை கொடுத்துள்ளார். அதனை டிரைவர் வாங்கிச்சென்று வாகனத்தில் தார்ப்பாயால் மூடப்பட்டு இருந்த பார்சல்கள் மீது ஊற்றி உள்ளார். அங்கே ஏன் தண்ணீர் ஊற்றுகிறீர்கள் என்று டிரைவரிடம் தையல்கடைக்காரர் ராஜாராம் கேட்டதற்கு, தார்ப்பாய்க்குள் பட்டாசு பார்சல்கள் உள்ளது என்று இளவரசன் கூறி உள்ளார்.
அந்த பார்சல்களில் இருந்து புகைவந்ததால் தண்ணீர் ஊற்றி அணைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் டிரைவரும், சாய்பாபாவும் தண்ணீரை வாங்கி ஊற்றி உள்ளனர். அவர்களுக்கு டீக்கடைக்காரர் சாதிக்பாட்ஷாவும் உதவியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தன. அதனால் அருகில் இருந்த கடைக்காரர்களும், பொதுமக்களும் சிதறி ஓடியிருக்கின்றனர். கணநேரத்தில் வாகனத்தில் இருந்த 6 மூட்டை பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் சரக்கு வாகனமும் வெடித்து சிதறி அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தது.
இந்த கோர சம்பவத்தில் சரக்கு வாகனத்தின் டிரைவர் இளவரசன், சாய்பாபா, டீக்கடைக்காரர் சாதிக்பாட்ஷா ஆகியோர் உடல் சிதறி பலியானார்கள். அவர்களின் தலையும், உடல்பாகங்களும் தனித்தனியாக சிதறி கிடந்தன.
மேலும் இந்த கோர விபத்தில் பட்டாசுகள் சிதறி ஆங்காங்கே விழுந்து வெடித்ததில் 16 பேர் காயம் அடைந்தனர்.
இந்த கோர சம்பவம் பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர். மேலும் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர சுப்பிரமணியம், ராஜேஷ்குமார் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தில் இருந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையே இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலையில் உள்ள பரசுராமன் என்பவரது பட்டாசு கடைக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லும்போது வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 16 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி முருங்கம்பாக்கத்தை சேர்ந்த பட்டாசு குடோன் உரிமையாளர் வீராசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். இச்சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தில் பலியான சாய்பாபா, பட்டாசு தொழிற்சாலை ஊழியர் ஆவார். அவருடைய மனைவி வேதவல்லி (45). இவர்களுக்கு சத்யா (21), பிரதீபா (18) என்ற மகள்களும், ஆனந்த் (19) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் சத்யாவுக்கு வருகிற தை மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
கடந்த சில தினங்களாக சாய்பாபாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இவர் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் வீராசாமியின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் முருங்கப்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. பட்டாசு கொண்டு செல்லும்போது உரிமையாளர் வீராசாமி தான் உடன் செல்வது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் அவரால் செல்ல முடியாததால், தனக்கு பதிலாக பட்டாசு வேனில் சென்று வருமாறு சாய்பாபாவிடம் வீடு தேடிச் சென்று பட்டாசு உரிமையாளர் வீராசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு சாய்பாபா தனது உடல்நிலையை காரணம் காட்டி பட்டாசு வேனில் சென்று வர முதலில் மறுத்து விட்டதாக தெரிகிறது. உரிமையாளர் வீராசாமி தொடர்ந்து வலியுறுத்தவே வேறுவழியின்றி அந்த வேனில் சென்றுள்ளார். அப்போது தான் வேன் வெடித்த விபத்தில் சிக்கி உடல் சிதறி சாய்பாபா இறந்துள்ளார்.
Related Tags :
Next Story