முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை ஆளுநரை சந்திக்கிறார்


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை ஆளுநரை சந்திக்கிறார்
x
தினத்தந்தி 4 Oct 2020 2:50 PM GMT (Updated: 4 Oct 2020 2:50 PM GMT)

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, ரெயில்களை இயக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .

ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.   நாளை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story