வ.உ.சிதம்பரனார் பிள்ளை நினைவு நாள்: அவர்தம் தேசப்பற்றை போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி


வ.உ.சிதம்பரனார் பிள்ளை நினைவு நாள்: அவர்தம் தேசப்பற்றை போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 18 Nov 2020 6:03 AM GMT (Updated: 18 Nov 2020 6:03 AM GMT)

செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை சுதேசியாக தொடங்கிய ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகனார். செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


Next Story