சிவகங்கை நகராட்சி: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை...!


சிவகங்கை நகராட்சி: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை...!
x
தினத்தந்தி 22 Feb 2022 12:57 PM IST (Updated: 22 Feb 2022 12:57 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை நகராட்சியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை.

சிவகங்கை,

சிவகங்கை நகராட்சியில்  கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நகர்மன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 27 வார்டுகளுக்கு 125 பேர் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் சிவகங்கை நகராட்சியில் உள்ள 1 வது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்கு கூட பெறவில்லை. 

வேட்பாளர் செங்கோல் ஓட்டு மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஓட்டு கூட அவருக்கு பதிவாகாமல் இருந்தது மிகப்பெரிய அதிசயம் தான் என்று அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story