கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கு ஊட்டி அச்சக உரிமையாளர் மீண்டும் சிறையில் அடைப்பு


கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கு ஊட்டி அச்சக உரிமையாளர் மீண்டும் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 11 April 2022 7:50 PM IST (Updated: 11 April 2022 7:50 PM IST)
t-max-icont-min-icon

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் ஊட்டி அச்சக உரிமையாளர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுச்சேரி
புதுவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான மோகன் கமல், சென்னை எண்ணூர் பிரதீப்குமார், ரகு (வயது 30), ராயபுரம் நாகூர் மீரான் (30), தமீன் அன்சாரி (28), பழைய வண்ணாரபேட்டை சரண்ராஜ் (30) ரகு, ஊட்டி அச்சக உரிமையாளர் தாமஸ் (39) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் புதுவை வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி.ரன்வீர் சிங் கிறிஷ்ணியா உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ஊட்டி அச்சக உரிமையாளர் தாமசை உருளையன்பேட்டை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் தமிழகம், புதுவையில் ஏராளமான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து, கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய மென்பொருட்கள் (சாப்ட்வேர்), செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார்  அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Next Story