தடைக்கால நிவாரணத்தை உயர்த்த வேண்டும்

மீன்பிடி தடைக்கால நிவாரணம், படகு சீரமைப்பதற்கான உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மீன்பிடி தடைக்கால நிவாரணம், படகு சீரமைப்பதற்கான உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
படகுகள் சீரமைப்பு
கடல் மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையில் புதுவை-காரைக்காலில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்து கடற்கரையில் ஓய்வெடுத்து வருகின்றன. இந்த மீன்பிடி தடைக்காலம் அடுத்த மாதம் 14-ந்தேதி வரை அமலில் உள்ளது.
இந்த காலகட்டத்தில் மீன்பிடி படகுகளை சீரமைப்பது, வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மீனவர்கள் மேற்கொள்கின்றனர்.
ரூ.50 ஆயிரம்
இதனிடையே மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.5 ஆயிரத்து 500-ஐ ரூ.15 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்றும், படகுகளை சீரமைப்பதற்கு ரூ.50 ஆயிரமாவது வழங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மீனவர் மோகன் கூறியதாவது:-
நாள்தோறும் டீசல் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. அதிக அளவில் டீசல் போட்டுக்கொண்டு கடலுக்கு சென்று தங்கியிருந்து மீன்பிடித்தாலும் போதிய அளவுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் தொழிலில் நஷ்டம் தான் ஏற்படுகிறது.
தற்போது படகுகளை சீரமைக்க அரசு ரூ.20 ஆயிரம் தான் தருகிறது. ஆனால் ஒவ்வொரு வருடமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவாகிறது. எனவே அரசு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரமாவது வழங்கவேண்டும்.
டீசல் மானியம்
மேலும் 61 நாட்கள் தடைக்காலமானது கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு தற்போது வழங்கப்படும் நிவாரணம் ரூ.5 ஆயிரத்து 500 போதாது. அந்த தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும்.
ஏனெனில் மீனவர்களின் வாழ்வாதாரம் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டு வருகிறது. டீசலுக்கான மானியமும் குறைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வரியில்லாமல் டீசலை வழங்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story