எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு; 42 ஆயிரம் பேர் ஆப்சென்ட்- பள்ளிக் கல்வித்துறை தகவல்


மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள்.
x
மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள்.
தினத்தந்தி 6 May 2022 7:27 PM IST (Updated: 6 May 2022 7:27 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இன்று நடைபெற்ற மொழிப்பாட தேர்வை 42,024 மாணவர்கள் எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று  தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்படாமல், ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடத்தப்பட்டது.

அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கிய கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே தேர்வு நடத்தப்படவில்லை.   தற்போது 2 ஆண்டு இடைவெளிக்கு பின் நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. 

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று  தொடங்கியது.  இந்த நிலையில்,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்று நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 42,024 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 


Next Story