ரூ.21½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


ரூ.21½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

ரூ.21½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த நசீர்அலி(வயது 38) என்பவர் சங்கிலி வடிவிலும் மற்றும் மடிக்கணினியில் மறைத்தும் ரூ.21 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 355 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story