அரிவாளுடன் சுற்றித்திரிந்த 3 பேர் சிக்கினர்

பாளையங்கோட்டையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி தலைமையில் போலீசார் பாளையங்கோட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கக்கன்நகர், பைபாஸ் பாலம் மேற்கு பக்கம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த மாணிக்கராஜ் (வயது 26), நம்பி நாராயணன் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் (22) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து அரிவாள், வாள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story