ரெயிலில் கடத்திய 6½ கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் கடத்திய 6½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒடிசாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்
புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்தது. காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் ரெயில் பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர்.
அப்போது பொது பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பயணி ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 5 பெட்டலங்களாக இருந்த 6½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் பன்ரக் பகுதியை சேர்ந்த பிபேகானந்தா நாயக் (வயது 42) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story