ரூ.9 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


ரூ.9 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மனுநீதி நாள் முகாமில் ரூ.9 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் கிராமத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்ட மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமை தாங்கினார். இந்த முகாமில் பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித்தொகை, தோட்டக்கலைத்துறை மூலம் பயனாளிகளுக்கு நாற்றுகள், நீர் தெளிப்பான் கருவிகள், மருத்துவ காப்பீடு மற்றும் மக்களை தேடி மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் தாசில்தார் காயத்ரி, சமூக நல தாசில்தார் மகேஸ்வரி, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ஜெயபால், தேனாடு ஊராட்சி தலைவர் ஆல்வின் மற்றும் சோலூர்மட்டம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



Next Story