கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது


கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
x

கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

மலைக்கோட்டை, செப்.18-

திருச்சி சிந்தாமணி பூசாரி தொழில் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 32). கூலித் தொழிலாளியான இவர் சிந்தாமணியில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே நடந்து சென்றார். அப்போது, அவரை வழிமறித்த சங்கரன் பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்த முகில் குமார் (26) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.ஆயிரத்தை பறித்து சென்றார். இது குறித்த. புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து முகில் குமாரை கைது செய்தார்.


Next Story