5 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது



நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 5 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் அருகே உள்ள பாடகபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). இவர் கடந்த 2014-ம் ஆண்டு அடிதடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 5 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், நீதிமன்றத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, வீரவநல்லூர் போலீசார், ஆறுமுகத்தை கைது செய்து பிடி ஆணையை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire