5 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது


5 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது
x

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 5 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே உள்ள பாடகபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). இவர் கடந்த 2014-ம் ஆண்டு அடிதடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 5 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், நீதிமன்றத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, வீரவநல்லூர் போலீசார், ஆறுமுகத்தை கைது செய்து பிடி ஆணையை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Next Story