9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
கல்லிடைக்குறிச்சியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கயத்தாறு வடக்கு மயிலோடையை சேர்ந்த இன்பராஜ் (வயது 43) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த 9 ஆண்டுகளாக கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அம்பை நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. கல்லிடைக்குறிச்சி போலீசாரும் இன்பராஜை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்பராஜ் வேறொரு வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பிடிவாரண்டு பெற்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Related Tags :
Next Story