வீட்டுக்குள் புகுந்த பாம்பு


வீட்டுக்குள் புகுந்த பாம்பு
x

தாயில்பட்டி அருகே வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு அலுவலர் செந்தூர்பாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பினை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர்.


Related Tags :
Next Story