அரளி விதையை அரைத்து குடித்து வாலிபர் சாவு


அரளி விதையை அரைத்து குடித்து வாலிபர் சாவு
x

திருமருகல் அருகே அரளி விதையை அரைத்து குடித்து வாலிபர் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சி ஆண்டிபந்தல் தோப்பு தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் வீரமணி (வயது 35) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தையல்நாயகி (35). வீரமணி மதுகுடித்து விட்டு அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனவைி கோபித்து கொண்டு புத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வீரமணி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார்.இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story