பனை மரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி

பனை மரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலியானார்.
விருதுநகர்
சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாண்டி மகன் மாரிச்செல்வம் (வயது 25). சுமை தூக்கும் தொழிலாளி. இந்தநிலையில் சம்பவத்தன்று தனது நண்பர்கள் ஈஸ்வரன், மலைப்பாண்டி ஆகியோருடன் அருகில் இருந்த தோட்டத்தில் நுங்கு வெட்டி சாப்பிட சென்றார். மாரிச்செல்வம் ஒரு பனை மரத்தில் ஏறி நுங்குவெட்ட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, ஈஸ்வரன், மலைப்பாண்டி ஆகிய இருவரும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், மாரிச்செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மாரிச்செல்வத்தின் தந்தை பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story