புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது


புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
x

பெண் கைது

ஈரோடு

ஈரோடு நத்தகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட கடையில் சோதனை செய்தனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 13 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த பேபி (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 13 பாக்கெட் புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story