உதவி வருவாய் அலுவலர் பணியிடை நீக்கம்



திண்டுக்கல் மாநகராட்சியில் உதவி வருவாய் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாநகராட்சியில் உதவி வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தவர் சாரங்க சரவணன். இவர் மீது பல்வேறு புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் சாரங்க சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினர். இந்த நிலையில் நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அவர் மீது தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire