கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது



நெல்லையில் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
வடக்கன்குளம்:
பழவூர் அருகே உள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் யோவான் (வயது 52). இவர் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பழவூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் நெல்லை கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து பழவூர் போலீசார் யோவானை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire