லாரி மோதி வாலிபர் பலி


லாரி மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் இமாம்பாடாவை சேர்ந்தவர் ஜகத் (22). சம்பவத்தன்று இவர் ஸ்கூட்டரில் பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜூஜூவாடி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜகத் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் லாரி மோதி பலியான ஜகத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story