கார் மோதி பனியன் தொழிலாளி சாவு



திருப்பூர், கருவம்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கார்த்திகை செல்வம் (வயது 49). பனியன் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் தாராபுரம் ரோடு குப்புச்சிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவினாசிபாளையம் போலீசார் கார்த்திகை செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire