அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழா


அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழா
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மாதாங்கோவில் ரோட்டில் உள்ள குருநாதர் சமேத அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை, மாலை 4 மணியளவில் பூரண கும்ப ஜெபம் நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதியிலும் காப்பு கட்டப்பட்டது. இரவு 7.35 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நந்தி, பலிபீடம், கொடி மரம் ஆகியவற்றிற்கு 18 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி சப்பரத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா நடைபெற்றது. இன்று( வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு இருளப்பசுவாமி திருவீதியுலாவும், நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு மஞ்சள் பால்குட ஊர்வலமும், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடக்கிறது.


Next Story