பரமத்திவேலூரில் ஓட்டலில் மதுவிற்ற உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


பரமத்திவேலூரில் ஓட்டலில் மதுவிற்ற உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு விற்றது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து மது விற்றதாக ஓட்டல் உரிமையாளர் செந்தில் மற்றும் அவரது தம்பி சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story