8 மாதங்களாக தலைமறைவாக இருந்த சாராய வியாபாரி கைது

8 மாதங்களாக தலைமறைவாக இருந்த சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சேலம்
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி ஊராட்சியில் கடந்த ஜனவரி மாதம் கெங்கவல்லி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் அதே பகுதியை சேர்ந்த தனபால் (வயது 26) சாராயம் விற்றுக்கொண்டு இருந்தார். போலீசார் அவரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று சாத்தப்பாடி பகுதியில் பதுங்கி இருந்த தனபாலை கெங்கவல்லி போலீசார் கைது செய்தனர். அவர் மீது சேலம், நாமக்கல் போலீஸ் நிலையங்களில் 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story