வேட்டவலம் அருகே ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்


வேட்டவலம் அருகே ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்
x

வேட்டவலம் அருகே ஒப்பந்ததாரரை தாக்கிய அ.ம.மு.க. ஒன்றிய செலயாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராஜீ (வயது 46), ஒப்பந்ததாரர். திருவண்ணாமலை பழைய கார்கானா தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார் (43). இவர், கீழ்பென்னாத்தூர் மத்திய ஒன்றிய அ.ம.மு.க. செயலாளர்.

இந்தநிலையில் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வெங்கட்ராஜீ வேட்டவலத்தை அடுத்த ஆவூர் கிராமத்தில் உள்ள முருகர் கோவில் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சந்திரகுமார் மற்றும் திருவண்ணாமலை எடத்தெருவை சேர்ந்த பாலன் ஆகியோர் வெங்கட்ராஜீயை ஆபாசமாக பேசி, கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரகுமார் மற்றும் பாலன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story