வேலூரில் விழிப்புணர்வு ஊர்வலம்


வேலூரில் விழிப்புணர்வு ஊர்வலம்
x

வேலூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர்

தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரத்தையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. வேலூர் டவுன் ஹாலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் கவிதா, தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் நாகராசன் உள்பட அதிகாரிகள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் அண்ணாசாலை வழியாக சென்று ஊரீசு கல்லூரியில் முடிவடைந்தது.


Next Story