திருச்செந்தூர் கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம்


திருச்செந்தூர் கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான வேல்முருகன் வந்தார். அவர் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையில் தற்போது கிராமிய பாடகர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தமிழக அரசும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது' என்று தெரிவித்தார்.


Next Story