தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் உதவி வழங்க வேண்டும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தல்


தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் உதவி வழங்க வேண்டும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தல்
x

தொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் உதவி வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டும் திட்டத்தின் மூலம் இணை மானிய திட்டம் அறிமுக கூட்டம், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடைய வாய்ப்புள்ளது. எனவே அவர்களையும் தொழில் முனைவோராக்க உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும். குழு தொழில் உருவாக்கம் மூலம் ஏழை மகளிர் முன்னேற வாய்ப்பு உள்ளது. எனவே வங்கிகள் தொழில் முனைவோருக்கு கடன் உதவி அளிக்க வேண்டும் என்றார்.

அதைத் தொடர்ந்து இணை மானிய திட்ட விளக்கம், விண்ணப்பிக்கும் முறை, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படும் 277 ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து தொழில்முனைவோர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை கொண்டு செல்ல வேண்டும் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருக்கு கலெக்டர் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆலியமா ஆப்ரஹாம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் கங்காதரன், வேளாண் பொறியியல் துறை அலுவலர் சுரேஷ், மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயலாக்க பகுதிகளில் உள்ள சேவை வங்கி மேலாளர்கள் மற்றும் பிற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story