மதுவிற்ற கடை உரிமையாளர் மீது வழக்கு

ஜோலார்பேட்டை அருகே மதுவிற்ற கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கைக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாச்சல் பகுதியில் பெட்டிக்கடையில் மது விற்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் அரசு மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து கடை உரிமையாளர் ஜோதி (வயது 60) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story