கிறிஸ்தவ ஆலய திருவிழா



தூய செபஸ்தியார் ஆலய திருவிழா நடந்தது.
இட்டமொழி:
பாளையங்கோட்டை அருகே உள்ள ஜவகர்நகர் பணித்தளம், ஆயன்குளம் தூய செபஸ்தியார் ஆலயத்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடைபெற்றது. 28-ந் தேதி திருவிழா திருப்பலி, முதல் நற்கருணை பெருவிழா, அசன விருந்து, சப்பரபவனி நிகழ்ச்சிகள் நடந்தன. 29-ந் தேதி திருவிழா நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலய திருவிழாவில் புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் சி.முத்துக்குட்டி பாண்டியன் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராஜ் அடிகளார், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire