இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பொங்கல் பரிசு-கலெக்டர் சாந்தி வழங்கினார்

தர்மபுரி
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. இதேபோல் மாவட்டத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வருபவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடந்தது. காரிமங்கலம் ஒன்றியம் தும்பலஅள்ளியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு, இலங்கை தமிழர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைவாணி, தாசில்தார் சுகுமார், வட்ட வழங்கல் அலுவலர் நாராயணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story