எலி மருந்து தின்று கல்லூரி மாணவர் தற்கொலை


எலி மருந்து தின்று கல்லூரி மாணவர் தற்கொலை
x

மதுரையில் எலி மருந்து தின்று கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை

மதுரை காமராஜபுரம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மகன் முகேஷ் (வயது 22). தல்லாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். முகேஷ் சரிவர படிக்காமல், செல்போனில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக பெற்றோர் அவரை கண்டித்தனர். அதனால் மனவருத்தம் அடைந்த முகேஷ் சம்பவத்தன்று மாலை வீட்டில் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story