14 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்


14 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x

ஆற்காட்டில் 14 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று வட்ட வழங்கல் அலுவலர் சந்தியா, வருவாய் ஆய்வாளர் மாதவன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு பைபாஸ் சாலை ஓரத்தில் 14 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலாஜா நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.


Next Story