இரு தரப்பினர் இடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு


இரு தரப்பினர் இடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு
x

இரு தரப்பினர் இடையே மோதல் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

துறையூர்:

துறையூரை அடுத்துள்ள சிங்களாந்தபுரம் தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 41). டிரைவரான இவரிடம் தெற்கீயூரைசேர்ந்த பாலமுருகன், சக்திஸ்ரீராம், வினோத், அபினாஷ், முரசொலி, சுஜித், ராகுல், கவின் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட சூரியகுமார்(43), நந்தா(19), லோகநாதன்(41), சந்திரசேகர்(23) ஆகியோரை 8 பேரும் சேர்ந்து பலமாக தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story