எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள மனுக்கள் குறித்து ஆலோசனை கூட்டம்


எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள மனுக்கள்  குறித்து ஆலோசனை கூட்டம்
x

எம்.எல்.ஏ.க்கள் அளித்துள்ள மனுக்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் சோளிங்கர் மற்றும் அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தங்கள் சட்டமன்ற தொகுதி மக்களின் முக்கியமான 10 பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அளித்துள்ள மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 10 மனுக்கள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்து, துறைகள் தங்களின் தலைமை இடத்திற்கு அறிக்கையை முறையாக தயார் செய்து வழங்கிட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களும் அரசின் மூலம் ஒப்புதல் பெரும்படியாக முழுமையாக ஆராய்ந்து என்ன பிரச்சினைகள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், மாவட்ட அளவில் முடிக்கப்பட வேண்டிய பிரச்சனைகளை அரசின் மூலம் ஒப்புதல் பெற உரிய கருத்துருக்களுடன் அனுப்பி வைக்க வேண்டுமெனவும், இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென கலெக்டர் துறைச்சார்ந்த அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.முனிரத்தினம், சு.ரவி, ஊரக வளர்ச்சி முகமை‌ திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story