கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

ராணிப்பேட்டை

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் விடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில்,

மாவட்டம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story