தடுப்பணையில் முதலை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

தடுப்பணையில் முதலை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
தாராபுரம்
அமராவதி ஆற்றில் தாராபுரம் அலங்கிய சாலையில் சீத்தக்காடு மற்றும் தாளக்கரை பகுதியில் ராட்ஷ்ச முதலைகள் நடமாட்டம் தொடர்ந்து நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் தடுப்பணையிலும் முதலைகள் நடமாட்டம் உள்ளதாக நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை பலகை வைத்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
அமராவதி அணையில் இருந்து உடுமலை, தாராபுரம், சின்னதாராபுரம், அரவக்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள சுமார் 1.5 ஏக்கர் நிலம் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க அமராவதி பெரும் பங்கு வகித்து வரும் ஆறு கரூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் இணைகிறது.பழைமை வாய்ந்த அமராவதி ஆற்றில் அலங்கியம் சாலையில் சீத்தக்காடு பகுதியில் உள்ள தடுப்பணையில் பழனி பாதையாத்தரை பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தினசரி அதில் குளிப்பதும், பெண்கள் துணி துவைப்பது அத்துடன் குழந்தைகள் விடுமுறை நாட்களில் ஆற்றில் இறங்கி தண்ணீரில் நீந்தி விளையாடி வருவது வழக்கம்.இந்நிலையில் கடந்த 6 மாத காலமாக அமராவதி ஆற்றில் தாராபுரம் அடுத்த சீத்தக்காடு பகுதியில் முதலைகள் இருப்பதாக ஒரு சிலர் கூறிவந்த நிலையில் திடீரென ராட்ஷ்ச சுமார் 10 அடி நீளமுள்ள முதலை ஒன்று அடிக்கடி பாறை மீது ஏறி ஓய்வெடுத்து வந்ததை சிலர் வாட்ஸ் அப்பிலும், சமூக வலை தளத்திலும் பதிவிறக்கம் செய்து வந்தனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்வதை தவிர்த்து உள்ளனர். இந்நிலையில் தாராபுரம் அடுத்த தாளக்கரை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆற்றிற்கு துணி துவைக்க சென்றார். அப்போது அமராவதி ஆற்றில் சுமார் 8,அடி நீளம் கொண்ட ராட்ஷ்ச முதலை ஒன்று தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தது. அந்த பெண் உடனே தனது கையில் வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்தார்.பிறகு அதனை சமூக வலைதளத்தில் பதிவிறக்க்கம் செய்துள்ளார்.இதன் விபரம் விஸ்வரூமமாக பரவியது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் நீர் உந்தும் தடுப்பணை இடத்திலும் முதலை தென்பட்டதாக அப்பகுதிக்கு துணி துவைக்க சென்ற பெண் ஒருவர் ராட்ஷ்ச முதலையை கண்ட காட்சி சமூக வலைதளத்தில் உலா வருவந்ததை ஒட்டி நகராட்சி நிர்வாகம் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் முதலைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.