ஆன்மிக சுற்றுலாவாக வந்த ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் சாவு

ஆன்மிக சுற்றுலாவாக வந்த ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் இறந்தார்.
திருவண்ணாமலை
ஆன்மிக சுற்றுலாவாக வந்த ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் இறந்தார்.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் அர்ஜுனா சோலாப்பர்க் (வயது 78). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆன்மிக சுற்றுலா பயணமாக திருவண்ணாமலைக்கு வந்தார்.
இதையடுத்து அவர் திருவண்ணாமலை அத்தியந்தல் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். உடல்நல குறைபாடால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர
Related Tags :
Next Story