தொழிலாளிக்கு கொலை மிரட்டல்:2 வாலிபர்கள் கைது


தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, செல்சினி காலனி பகுதியில் சென்ற தொழிலாளி ஒருவரை, பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த முத்துக்குமார் மகன் தட்சிணாமூர்த்தி (வயது 19), முருகேசன் மகன் சிதம்பரம் (20) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire